அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் சிறு குறு தொழில்களின் ஆணிவேராக விளங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும்.லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன்கருதி இயங்கிவரக் கூடியபொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து. (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, ஒன்றிய அரசினுடையபொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக்கூடிய வகையிலே, மாண்புமிகு  பிரதமர் அவர்களுக்கு நான் இதைச் சுட்டிக்காட்டி,நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடிய வகையில் கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி