தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களே,  துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்களே,அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களே, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களே,திரு. ஜெயரஞ்சன் அவர்களே,மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களே,சிறப்பான வரவேற்பு அளித்திருக்கக்கூடிய அமெரிக்க வாழ் இந்திய உறவுகளே, தமிழின உடன்பிறப்புகளே, அனைவர்க்கும் எனது மாலை வணக்கம்!

முதலில் நானும் எனது துணைவியாரும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது, பறைஇசையுடனும், திருக்குறள் பாடல்களுடனும் வரவேற்பு வழங்கியமைக்காக எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சான் பிரான்சிஸ்கோ என்ற ஊரில் இருக்கிறேனா, சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வையே எனக்கு நீங்கள் இப்போது ஏற்படுத்திவிட்டீர்கள். இப்படிப்பட்ட அன்பான வரவேற்பு – சந்திப்பு நிகழ்வைஏற்பாடு செய்திருக்கிற இந்தியத் துணைத் தூதர் திரு.ஸ்ரீகர் ரெட்டி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எப்போதும் சிரித்த முகத்தோடு – அன்பான வார்த்தைகளையே பேசுகிறவராக இந்தியத் துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

உலகின் மூன்றாவது பெரிய நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். 1971-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வருகை தந்தார். அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடுஇப்போது வந்திருக்கிறேன். உலகின் மதிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களான உங்களை பார்க்கும்போது எனக்குப் பெருமையாவும், மகிழ்ச்சியாவும் இருக்கிறது. இத்தனை இந்திய முகங்களை இங்கேபார்க்கும்போது இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்தில்இருக்கிற மாதிரிதான் எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கிறேன் என்றுதோன்றவில்லை. உலகத்தில் எந்த நாடாகஇருந்தாலும் – அது இந்தியர் இல்லாத நாடாகஇருக்காது. இந்தியர்கள் வாழுகிற நாடாகத்தான் உலகின் எல்லா நாடுகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களைஈர்க்கிற நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது.

நியூயார்க், நியூஜெர்சி, வாசிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லாண்டா இப்படிஅமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள்.சில பேரை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இப்படிபரந்து விரிந்த அமெரிக்கா முழுமைக்கும் தமிழர்கள் பரந்து இருக்கிறார்கள். பல்வேறு மொழிகளைச்சேர்ந்த இந்திய இன மக்கள் இருக்கின்றீர்கள். பல்வேறு மதங்களைச்  சேர்ந்த மக்கள் இங்குஇருக்கின்றீர்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான்வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின்முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்கு தான்நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்.

நம்முடைய இந்தியாவும், நீங்கள் இருக்கக்கூடியஅமெரிக்காவும் உலகில் இருக்கக்கூடிய மிகமுக்கியமான நாடுகள். இரண்டுமே ஜனநாயகநாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகஅமெரிக்கா இருக்கிறது என்றால், ஐந்தாவதுமிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பலஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது.

இந்தியாவில் வர்த்தகம், அறிவியல், கணினிஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. கேல்லப்என்ற நிறுவனத்தினுடைய பொது கருத்து கணிப்பின்படி அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின்பட்டியலில் ஏழாவது இடத்தை இந்தியாபெற்றிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவிற்குகுடிபெயர்ந்தவர்களின் பட்டியலில் இந்திய மக்கள்இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில்இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாவதுஇடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காகுடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோவைச்சேர்ந்தவர்கள் 12.7 விழுக்காடு. இந்தியர்கள்இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்தஅளவுக்கு இந்தியாவை ஈர்க்கின்ற நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்கின்றமக்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிககுறைவு என்றாலும் உயர் கல்வியிலும், வர்த்தகத்திலும், சிறப்பான உயர் பதவிகளிலும்இந்திய வம்சாவளியினர் மிக அதிக இடங்களைப்பெற்றிருக்கின்றார்கள்.

அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில்இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சிநிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளிவிஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்றுமடங்காக உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டுநாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள்.

ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா – அமெரிக்கா உறவு மிக மிக முக்கியமாக இருக்கிறது.  அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்தியவம்சாவளியினர் மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்கள்என்பது உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப்பார்க்கும் போதே எனக்கு தெளிவாகத் தெரிகிறது.  இந்தியா – அமெரிக்கா நட்பு என்பது இரண்டு நாட்டுஅரசுகளின் உறவாக மட்டுமில்லாமல், இரண்டு நாட்டுமக்களின் நட்புறவாகவும் எப்போதும்அமைந்திருக்கிறது என்பது தான் இருநாடுகளுக்கிடையிலான தனிச் சிறப்பு.  அதிலும்குறிப்பாக, தமிழ்நாடு என்பது அமெரிக்காவின்ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்கநிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரியபொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான்  இதற்குகாரணம்.

300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள்தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களைநிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாகஅதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குவரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம்நேரில் அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். இந்தஇனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்தியவம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யஅமெரிக்க நிறுவனங்களை  தூண்ட வேண்டும் என்றுஉங்களை உரிமையோடு கேட்டுக்கொள்ளவிரும்புகிறேன்.

ஒரு செடியையோ, மரத்தையோ ஒருஇடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்தில்நட்டால்  எல்லா செடியும் மரமும் அங்கு வளருவதுஇல்லை. ஆனால், நீங்கள் எல்லோரும் நாடுகள்கடந்து வந்திருந்தாலும் மிக மிக சிறப்பாகவளர்ந்திருக்கிறீர்கள். இது தான் நம்முடையஇந்தியருடைய பெருமை. இது தான் அமெரிக்காவின்வளம்.

சிலர் விரும்பி வந்திருக்கலாம், சிலரை சூழ்நிலைகள் துரத்தியிருக்கலாம், உங்களில் சிலர் வசதியான சூழ்நிலையிலிருந்து வந்திருக்கலாம், சிலர் வசதி குறைவினாலும் கூட இங்கு வந்திருக்கலாம். ஆனால், இன்று எல்லோரும் உன்னதமான இடத்தை பிடித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் உங்களது உழைப்பும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் காரணம்.

மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை,  தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள், இவை தான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து உயர்த்தியிருக்கிறது. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளை விட இந்த ஐந்தும் தான் உங்களை வளர்த்து இருக்கிறது. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி அனைவரின் வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், அத்துடன் அவருக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி!  வணக்கம்!