குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ்

சென்னை தாம்பரம் 24வது வார்டு திமுக வட்ட செயலாளரும் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவருமான நாகராஜ், அப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்க தொண்டாற்றுவதில் வல்லவர். பாதாளச் சாக்கடை அடைப்பு என்றால் அடைப்பை நீக்கும் தொழிலாளி தொட்டிக்குள் இறங்குவதற்கு முன் அவர் இறங்கி ஆய்வு மேற்கொண்ட பிறகே தொழிலாளி இறங்க அனுமதிப்பார். அதேபோல் குடிநீர் அடைப்பு என்று கூறினால் முதலில் குடிநீர் குழாய்க்குள் மூச்சுக்காற்றை ஊதி ஆய்வு செய்து அடைப்பை உறுதி செய்த பிறகே அதற்குறிய தொழிலாளிகளுக்கு அழைப்பு கொடுப்பார். இவரின் இத்தகைய செயல்களால் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுள்ளார். தங்கள் வீட்டுப் பிள்ளையாக அப்பகுதி மக்கள் நாகராஜை கொண்டாடுகிறார்கள்.