உயிரோட்டமுள்ள திரைக்காவியம் “டாடா”

ஒலிம்பியா மூவிஸ் வெளியீட்டில் அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின்அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைக்காவியம்டாடா“. குழந்தையை கருவிலேயே கலைக்க சொல்கிறார் கணவர் கவின். குழந்தையை பெற்றே தீர்வேன் என்கிறார் மனைவி அபர்ணாதாஸ். குழந்தையை பெற்று மருத்துவமனையிலேயே விட்டு செல்கிறார் அபர்ணாதாஸ். அந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார் கவின். குழந்தை வேண்டுமென்று சொன்னவள் ஏன் விட்டுச் செல்கிறார். வேண்டாமென்று சொன்னவர் ஏன் எடுத்து வளர்க்கிறார் என்பதை ஒரு காவியம் போல் படம் நகர்கிறதுகடுகு அளவுதான் கதை. அதை காவியமாக்கியிருக்கும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. அமைதியான முகத்தில் ஆயிரம் அர்த்தங்களை அறிய வைக்கிறார் நடிகர் கவின். உச்சக்கட்ட காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் நடிகை அபர்ணாதாஸ். விடிவி கணேஷின் கரகரப்பான குரல் படத்தை கலகலப்பாக்குகிறது. பாக்கியராஜின் முதிர்ச்சியான நடிப்பு படத்துக்கு பக்கபலமாக உள்ளது**********