மீண்டும் நடிக்க வருகிறார் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா

பபிதாதமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான பெயர்,  இது தீபாவளி சீசன். இந்தநேரத்தில் அவர் நடனமாடி புகழ்பெற்ற ஒரு பாடலை சொன்னால் பொருத்தமாக இருக்கும். அது கமல்ஹாசனின்நாயகன்படத்தில் வரும்நான் சிரித்தால் தீபாளி..” பாடல். அந்தப் பாடலில் அவரதுஅழகு நடனம் அனைவரையும் வசீகரிக்க வைத்ததுதிருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பபிதா, சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் லக்‌ஷா கதாநாயகியாக நடித்தகாதலை மறந்தேன்படத்தை தயாரித்திருந்தார்அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க களமிறங்கி விட்டார் பபிதா.************

இயக்குனர் கே.பாக்யராஜின்  சின்னவீடுபடத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமானது. நடிகர் விஜய்யின்ரசிகன்படத்தில்பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி..” பாடலில் பபிதாவின் நடனம் பிரபலம். விஜயகாந்துடன்கூலிக்காரன்’, டி.ராஜேந்தருடன்ஒரு தாயின் சபதம்’, கார்த்திக்குடன்நட்பு’, ’பூவே பூச்சூடுவா’ (இரண்டாம்நாயகி)  உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், இந்தி என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கும்பபிதா, அன்றைய கவர்ச்சி கன்னிகளில் ஒருவர்இவர், பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாகவும் பின்னாளில் எம்ஜிஆருக்கு நெருக்கமான விசுவாசியாகவும் இருந்த நடிகர் ஜஸ்டினின் மகள்.

அவருடன் பேசிய போது, உலகநாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், திரைக்கதை மன்னன் பாக்யராஜ், சகலகலா வல்லவர்டி.ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக் உட்பட பல ஹீரோக்கள் படத்தில் நான் நடித்துவிட்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும்சும்மா இருக்காது என்பதுபோல இப்போது மீண்டும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது.

உலக நாயகன் படத்தில் நான் நடனமாடி யெதெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் அவர்நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன். ‘நான் சிரித்தால் தீபாவளிபாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இன்றைக்கும் நான் அதாவதுபபிதா சிரித்தால் தீபாவளிதான்என்னும் ரசிகர்கள் நிறைய.

இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கதாபாத்திரம் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம்என்பது ஊறியுள்ளது.  அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாட  சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கதாபாத்திரம் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்துவாங்க  தயாராக இருக்கிறேன். நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தப்பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்என்கிறார்.