*துப்பில்லாத் தமிழர்களைக்* *காறித் துப்பு !*

தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழைக் காணோம் !

      தமிழறியாப் பேதைகளா ஆங்(கு)   சான்கள் ?

தமிழ்வகுப்பே நடத்தலையா அவர்கள்சீச்சீ ?!

      *தமிழ்ப்பள்ளி புக்கிட்மெட் ராஜம்* தன்னில்

தமிழ்க்குழந்தைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி அஃதில்

       *தமிழினையே த்மிழர்களே அவம தித்தே*

தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே  நீக்கி விட்டே

      தமிழ்நிகழ்ச்சி நடத்தியதும் *தப்போ, தப்பு !*

*தமிழ்ப்பள்ளி வேண்டாமே* என்று சில்லோர்

         *சட்டத்தின்* துணைகொண்டே தமிழைக் கொல்ல

இமியளவும் சிந்திக்க மறந்து விட்டார் ;

      இங்குள்ள நீதிமன்றம் ஏறி விட்டார் !

தமிழ்மொழியும் சட்டத்திற் குட்பட் டேதான்

       தமிழ்ப்பள்ளி வழியாக வாழு தென்றே

*தமிழ்ப்பற்றோர்* போராடும் வேளை இங்கே

    தமிழர்சிலர் தமிழினையே அழிக்கின் றாரே !

தமிழ்விந்தில் பிறந்தவர்கள் அவர்கள் தாமா ?

     தமிழ்க்குருதி ஓடலையா அவரு டம்பில் ?

தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பாத தமிழப் பெற்றோர் ;

     தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழை விட்டோர்

தமிழர்களாய் இனிக்கருதப் படவே கூடா ;

      தவறிந்தக் கருத்தென்போர்க்(கு)  ஓர்கோ ரிக்கை !

தமிழ்ப்பள்ளி , தமிழையுமே அழிக்கப் பார்க்கும்

   *டமிலர்கள்* யார் ? அவருக்(கு) *ஓர்பேர் சொல்க !*

*தன்மானம்* தனைக்காக்கும் *ஆடை* போன்ற

       *தமிழ்மொழியை அணியாத* தமிழ னுக்கே

என்மானம் உண்டாம் ? ! *தமிழ்ப டித்தே*

      இந்நாட்டில் மட்டுமல்ல எந்நா டெங்கும்

தன்மாடம் தன்னாடை அணிந்தி ருக்கும்

     தமிழர்களே நீங்கள்தாம் சொல்ல வேண்டும் !

என் ஈனப் பிறவிகளோ ? தமிழைக் கொல்லும்

       எந்தமிழர் எவரெனினும் திருந்தப் பாரீர் !

தமிழ்நிகழ்ச்சி நடத்திடுவோர் அனைவ ருக்கும்

     தணியாத கோபமுடன் கடிந்தே சொல்வோம் !

தமிழ்ச்சொல்லே இல்லாத பதாகை ஏதும்

      தவறியுந்தான் இனிமேலும்  தொங்க விட்டால்

இமைநொடிக்கும் முனர்,அவர்கள் நிகழ்ச்சி யைத்தான்

     இதயமிலா அரக்கரைப்போல் *ஒதுக்கி வை ! வை !*

*சுமை,தமிழே* எனில்அந்தச் சுமையைத் தாங்கத்

      துப்பில்லாத் தமிழர்களைக் *காறித் துப்பு !*

     

                                                            *பாதாசன்*