மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை

மலாயப் பல்கலைக் கழகத்தில்

      மாபெரும் உலகப் பேரறிஞர் ;

எலாமும் தெளிந்த *வள்ளுவர்க்கே*

       *இருக்கை* அமைக்க வேண்டுமென

மலேசியப் பிரதமர் *அன்வரிடம்*

        மகிழ்வாய் *இந்தியப் பிரதமரும்*

சிலேடை இன்றி நேரடியாய்த்

       சிறுகோ ரிக்கை முன்வைத்தார் !

_

‘”பிரதமர் *மோடி* விருப்பத்தைப்

      பிரதமர் அன்வர் உடனேற்று

வரவேற் றுள்ளார் ; அவருக்கே

      மனம்நி றைந்த நன்றியினைத்

தரவே மலேசிய இந்தியர்கள்

       குறிப்பாய்த் தமிழர் அனைவருமே

கரவோ சையுடன் கூறினமே ;

     காலத் தினால்செய் உதவியென்றே !

வான்புகழ் *வள்ளுவன் இருக்கைக்கு*

      மண்புகழ் மலேசியம் அளித்திருக்கும்

தேன்மிகுந் துள்ள வாக்கதனால்

       தென்றமிழ் நாட்டுத் தமிழர்களும்

தான்,பெரு நன்றியை நம்நாட்டுப்

     பிரதமர் தமக்கே சொல்லிடுவார் ,

ஊனுடல் உயிர்,மனம் அனைத்திலுமே

       ஒன்றிய *செம்மொழி தமிழினிலே!*

*இனத்தை ; மதம் ; மொழி ,* எதனையுமே

        இம்மி யளவும் கலக்காமல்

மனித்தப் பண்பை, வாழ்முறையை

    மாசு, மறுவறத் *தம்குறளில்*

தனித்த உணர்வுடன் செய்தளித்த

     *தக்கார் வள்ளுவர்* புகழ்வளர

இனித்த மனத்தில் அவர்க்(கு)இருக்கை

      எழுப்பும் *மலேசியம்* வாழியவே !

                                                      *பாதாசன்*