இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை, விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன், தாக்கம் (i2I) சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் 09.08.2024 அன்று  நடத்திய நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்களால்,”இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் நுண்ணிய பிளாஸ்டிக்கை அகற்றுதல் (பப்பர் சிஸ்டம்)” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் முதல் பரிசைப் (ரூபாய் ஒரு லட்சம்) பெற்று சாதனை படைத்துள்ளது. 2000 விண்ணப்பதாரர்களில், 701 குழுக்கள் ஆரம்பத் திரையிடலைத் தாண்டி முன்னேறியது. மேலும் 20அணிகள் மட்டுமே தங்களின் கருத்துக்களை நிரூபிக்க ரூ.50,000/- நிதியுதவி பெற்றன. இவற்றில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்கள், நீர் கருப்பொருளில் முதல் இடத்தைப் பிடித்தனர். இச்சாதனையைப் புரிந்தமைக்காக ஆராய்ச்சி மாணவி செல்வி. சுவலட்சுமி ஆனந்தன், இறுதியாண்டு இளங்கலை கட்டிட பொறியியல் மாணவர்கள் முகேஷ் ஆர். ராஜராஜன் எம்., விஷ்ணு வர்தன் வி, மற்றும் குழுவின் வழிகாட்டி முனைவர். சிவக்குமார் ராமலிங்கம், உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (கட்டிட பொறியியல்) ஆகிய அனைவருக்கும், கழகத்தின் சார்பில் இயக்குநர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர்,கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.