நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம்,இன்று  (27.09.2024), நெய்யப்பட்ட சாக்குகள் உற்பத்தியாளர்களுக்கான ‘பி’ உரிமத்திற்கான சான்றிதழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப்  பயிற்சி  நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு பி.ஜே.கௌதம், பங்கேற்பாளர்களுக்கு தரநிலைகள் குறித்து விளக்கினார்.  இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு தினேஷ் ராஜகோபாலன், இணையதளம் மூலம் பிஐஎஸ் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறைகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 120 உற்பத்தியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.