ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்  என்று மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்  (15/03)2025) சென்னையில் தெரிவித்தார்.இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐஐடி மெட்ராஸ், தையூர் வளாகத்தில் அமைந்துள்ள ஹைப்பர்லூப் சோதனை அலகை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைபர்லூப் சோதனையமைப்பு சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப்  சோதனை குழாய் என்றார். அமைச்சருக்கு ஹைப்பர்லூப் செயல்படுவது பற்றிய செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான  சோதனை அமைப்பு முழுதும் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார் தற்பொழுது வளர்ந்துவரும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்களைத்  வந்துள்ளதாகவும் விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியா தயாராகிவிடும் என்றும் அமைசர் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கி வந்ததாகவும், தற்போது இந்த ஹைப்பர்லூப் திட்டத்தின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்- ல் மேம்படுத்தப்படும் என்றும், ஐசிஎஃப் தொழிற்சாலையில் திறமையான வல்லுனர்கள் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களுக்கான  பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளை திறம்பட மேம்படுத்தியுள்ளதாகவும் இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎஃப் -ல் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

ஐஐடி சென்னையின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் அவிஷ்கர் நிறுவனத்துக்கும் பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்திற்கு வந்த அமைச்சர், அங்கு ஐஐடி – ன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். அங்குள்ள மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களிடையே கலந்துரையாடினார். அப்போது, இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து துறைகளிலும் முன்னணி நாடாக விளங்கும் வகையில் செயல்பட்டுவருகிறது என்றார். தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி(செமி கண்டக்டர்) ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாக செயல்பட்டு வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ளதாகவும் இவர்கள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பெரிதும் பங்காற்றுவார்கள் என்றும் அமைசர் தெரிவித்தார். இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது குறைக்கடத்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கண்காட்சியில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுக் கேடயங்களை வழங்கி, மேலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஊக்கமளித்தார். நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி – ன் இயக்குனர் டாக்டர் காமகோட்டி உடனிருந்தார்.