காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) அறிவித்துள்ளது. இதனால் கைவினைஞர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, திரு மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்ததுஇதன்மூலம் கைவினைஞர்களின்  மாதாந்திர வருமானம் 33 சதவீதமும், நெசவாளர்களின் வருமானம் 10 சதவீதமும் உயர்கிறதுஇந்த முடிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்செயல்பாட்டுக்கு வருகிறது.

உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கேவிஐசி உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும்என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைவினைஞர்களின் வருமானத்தைப் பெருக்கவும், ஏழைகளுக்குவேலை வழங்கவுமான நோக்கத்துடன் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

பிரதமர் தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் பலமுறை காதி பொருட்களை வாங்குமாறு மக்களுக்குகுறிப்பாக இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பயனாக காதி பொருட்கள் விற்பனைஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. காதி பொருட்கள் உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் மாற்றம்விளைவிக்கும் முறைகளை கேவிஐசி பின்பற்றி வருகிறது.

2021-22 ஆம் நிதியாண்டில் கேவிஐசி பொருட்கள் உற்பத்தி 84,290 கோடியாகவும், விற்பனை 1,15,415 கோடியாகவும் இருந்ததாக கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்அக்டோபர் 2-ம் தேதிகாதி விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளதுஅன்று ஒருநாள் மட்டும் தில்லியில் உள்ள கன்னாட்  ப்ளேஸ்  கடையில் ரூ.1.34 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுஇதன் பெருமை பிரதமரையேசாரும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் காதி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. காதியை உலகளவிலானஉள்நாட்டுப் பொருள் என்ற வகையில் மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். இதன்பயனாக காதி உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும்ஊக்குவிப்பு இருக்கும் என்றும், இதன்மூலம் காதி பிரிவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.  694-வது கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கேவிஐசியுடன் தொடர்புடையதொழிலாளர்களின் கையில் அதிக பணத்தை வழங்கி அவர்களது பொருளாதார நிலையை முன்னேற்றதிட்டமிடப்பட்டுள்ளதுஇந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, வலுவான, முன்னேற்றமான, தன்னிறைவு கொண்டஇந்தியாவை கட்டமைக்க உதவும்