இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரிலான இந்த ஆடிட்டோரியத்தைத் திறந்து வைப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். பாரதியார் கல்வியின் அருமையையும் அவசியத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்து நம் நாடு உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகப்படுத்தினார். 2014 இல் 7 ஆகஇருந்த எய்ம்ஸ் மருத்துவமனை இப்போது 22 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் 596 மருத்துவகல்லூரிகள் செயல்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் 66000 மருத்துவ படிப்பு இடங்கள் கூடுதலாகஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல்ஒலிபரப்பு, மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம்இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற கி.ரா. அரங்கு திறப்பு விழாவில்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது அமைச்சர் முருகன் இவ்வாறு தெரிவித்தார்இந்தியா இப்போது ஜி20 அமைப்புக்கு தலைமை தாங்குகிறது. இந்தியா என்ன சொல்லப் போகிறது என்றுஉலகமே இப்போது உற்று கவனிக்கிறது. ஒரு இந்தியராக இது நமக்கு பெருமை, கெளரவம் ஆகும். பொருளாதாரத்தைப் பொறுத்து இந்தியா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2027இல் நாம்மூன்றாம் இடத்தை பிடிப்போம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எட்டு ஆண்டுகளில் 80000 ஸ்டார்ட் அப்புகள்தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்பைப் பொறுத்து உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகத் தலைமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் முருகன் மேலும் தெரிவித்தார்.

 நாம் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அமிர்த கால பட்ஜெட்டாக விளங்குகிறது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் முருகன் மேலும் தெரிவித்தார்நிகழ்ச்சிக்கு தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் டாக்டர் கே.சங்கரநாராயணசாமி தலைமை வகித்தார்புதுச்சேரி அரசின் போக்குவரத்து அமைச்சர் திருமிகு சந்திர பிரியங்கா கருத்துரை ஆற்றினார்முன்னதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் கி.ரா.அரங்கின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் ஆசிரியர் டாக்டர் .வெஙகடேசன் எழுதிய காரைக்கால்: ஒருதெய்வீக நகரம் என்ற நூலையும் அமைச்சர் வெளியிட்டார். பயிற்சியில் கலந்து கொண்ட பல்வேறுகல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.