‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ்

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டக் காாசியை குறித்து பேசிய நடிகர் பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டத்தை ‘3டி’ முப்பரிமாணத்தில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த முன்னோட்டம் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சுவாரசியங்களை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்என்கிறார்.********

பல கதாநாயர்கள் தங்கள் படம் குறித்த தகவல்கள் குறித்து சுவாரசியங்கள் காக்கும்போது, ‘அடுத்தடுத்த பதிவேற்றங்களுக்கு நான் உறுதிஎன்று பிரபாஸ் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.