ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்தாபுரி ஊராட்சியில், பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், கமுதி ஊராட்சி ஒன்றியம், வங்காருபுரம் ஊராட்சியில், பெரியனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி வட்டாட்சியர் திருமதி.சாந்தி அவர்கள், மண்டல துணை வட்டாட்சியர் திரு.வேங்கட கிருஷ்ணன் அவர்கள், பிரதான் நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் திருமதி.கனகவல்லி அவர்கள், திட்ட நிர்வாகி திரு.மோகன் அவர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.