சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்குமேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும்காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்தநகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும்வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடுமுதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு (L&O) மற்றும் குற்றப்பிரிவு(Crime) காவல் நிலையங்களில் பணிபுரியும் 173 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து (Traffic) காவலில் பணிபுரியும் 149 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் (AR) பணிபுரியும் 80 காவல் ஆளிநர்கள், நுண்ணறிவுப்பிரிவு (IS), மத்திய குற்றப்பிரிவு (CCB), நவீன காவல்கட்டுப்பாட்டறை (MCR), சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு (SCP),உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு (Highcourt Security), குற்றஆவண காப்பகம் (CRB), பணியிடை பயிற்சி மையம் (InserviceTraining), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புபிரிவு (CAWC) உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 85 காவல்ஆளிநர்கள் மற்றும் இதர பிரிவுகளான இரயில்வே (RAILWAYS),கடலோர பாதுகாப்பு குழுமம் (CSG) மற்றும் செயலாக்கம் (OPERATIONS) ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் காவல்ஆளிநர்கள் 57 என மொத்தம் 544 ஆண் மற்றும் பெண் காவல்ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்று (21.02.2023) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடுமுதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துக்களைதெரிவித்து, இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்இயக்குநர் திரு.சைலேஷ்குமார் யாதவ், இ.கா.ப, குற்றம் கூடுதல்காவல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.பநுண்ணறிவுப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் திரு.S.டேவிட்சன்தேவாசீர்வாதம், இ.கா.ப, கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல்இயக்குநர் திரு.சந்தீப்மிட்டல், இ.கா.ப, செயலாக்கம் கூடுதல் காவல்இயக்குநர் திருமதி.B.பாலநாக தேவி, இ.கா.ப, பொருளாதாரகுற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் திரு.அபின் தினேஷ் மொடக், இ.கா.ப, இரயில்வே கூடுதல் காவல் இயக்குநர் திருமதி.V.வனிதா, இ.கா.ப, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.T.S.அன்பு, இ.கா.ப., (வடக்கு), முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), திரு.கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப., (போக்குவரத்து), திருமதி.C.மகேஷ்வரி, இ.கா.ப., (மத்தியகுற்றப்பிரிவு), ஆகியோர் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணைஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள்மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர்திரளாக கலந்து கொண்டனர்.