அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தள்ளுபடி – சரத்குமார் வரவேற்பு

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதோடு, தங்கள் தீர்ப்பு சரியே என்று உறுதிபடக்கூறியிருப்பத. வரவேற்கத்தக்கது என சரத்குமார் கூறியுள்ளார். கடந்த 2009 – ஆம் ஆண்டு திரு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18%இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த 7நீதிபதிகள் கொண்ட அமர்வு, உள் ஒதுக்கீடுவழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற சரியான  தீர்ப்பை வழங்கியது. ஆனால், மாநில உரிமைகள் குறித்து ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் கட்சியினர், மாநில உரிமைகளை நீதிமன்றமே நிலைநாட்டி தீர்ப்பு வழங்கிய சமயத்தில், இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது வியப்பூட்டுகிறது. உள் இட ஒதுக்கீடு, பட்டியல் சமூகத்தைப் பல குழுக்களாகப் பிரிக்கும் எனத் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். பட்டியலின மக்களிடையே இருக்கும் சில பிரிவினைகளைக் களைந்து அவர்களை ஒன்றுபடச் செய்திருக்க வேண்டியது, தலைவர்களின் கடமை. அதைவிடுத்து, உள் இடஒதுக்கீடுகள் பிரிவினைகளை வளர்க்கும் என தெரிவித்தால், சமூகத்தில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளும் பிரிவினைகளை வளர்க்க தான் என்று கூற முடியுமா?  உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடும் தலைவராக, இந்தத் தீர்ப்பை ஆதரித்து, சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவம் தழைக்கவும் பணிசெய்ய வேண்டுமென சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.