‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் பின்னணி குரல்பதிவு பணிகள் தொடங்கியது

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பாக  கே.மாணிக்கம்  பெரிய பொருட்செலவில் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் தமிழ்த் திரைப்படமான ‘ரெட் ஃப்ளவர்’, அதன் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.  இப்படத்தின் திரைக்கதை கோர்வைப் பணிகளை முடித்து, தற்போது பின்னணிக் குரல் பதிவு பணிகளை நோக்கி நகர்கிறது. படக்குழுவினரின் அர்ப்பணிப்பால் படத்தை விளம்பரப்படுத்தும்  பணிகள் சுமூகமாக நடந்து வருகிறது. படத்தின் கோர்ப்பாளர் அரவிந்த், பார்வையாளர்களைக் கவரும் வகையில், தடையற்ற மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளை உன்னிப்பாக வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்க, படத்தின் மற்ற முக்கியகதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான்விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபிகண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். ********

ஒளிப்பதிவாளர் தேவ சூர்யாவின் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சந்தோஷ் ராமின் தூள்ளலான இசையில், இயக்குனர் பிரபாகரன் மேற்பார்வையில், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அளவுகோலை அமைக்க “ரெட் ஃப்ளவர்” திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது. மேலும் நடிப்பு காட்சிகளை சண்டைக்காட்சி இயக்குநர் இடி மின்னல் இளங்கோ அதிரடியாக காட்சி அமைத்துள்ளார். அவரது புதுமையான மற்றும் துணிச்சலான சண்டைக் காட்சிகள் படத்தின் ஆற்றலுக்கு கணிசமாக பங்களித்திருக்கிறது.

“படத்தொகுப்பு பணியை முடித்துவிட்டு டப்பிங்கில் கவனம் செலுத்தி வருகிறோம். ‘ரெட் ஃப்ளவர்’ படத்தை பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடின உழைப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பலன் கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளனர். மறக்க முடியாத சினிமா அனுபவத்தை உருவாக்க, அதிநவீன தொழில்நுட்பத்துடன் உயர் ரக-காட்சிகள் கலந்து, தமிழ் சினிமாவின் சவாலாக  ‘ரெட் ஃப்ளவர்’ தயாராகி வருகிறது” என்று இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ஆண்ட்ரூ பாண்டியன் மகிழ்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.