தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாக கூட்டரங்கில்,சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள்குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில் இன்று (6.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில்பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா, பண்பாடுமற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்டாக்டர்.பி.சந்தரமோகன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்திரு.சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்  ஆய்வுமேற்கொண்டாr 

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்பேசுகையில் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத்தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம்ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில்11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6,45,296வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல்11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல்28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலாத்துறைக்குதொழில் அந்தஸ்தை வழங்கும் சுற்றுலா கொள்கையைவெளியிட்டுள்ளார்கள்.

 தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள்வருகை தரும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்துசெயல்படுத்தி வருகின்றார்கள். அதனடிப்படையில்கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையைஇரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில்லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும்பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாகவிளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், முத்தமிழறிஞர்கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம்ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடிமதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில்கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும்,  நடைபெற்றுவருகின்றன. கொல்லிமலையை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கியசுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், உதகை படகு குழாமில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாமேம்பாட்டு பணிகளும், ஜவ்வாது மலையில் ரூ.2.91 கோடிமதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஏலகிரி மலையில்ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தைரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன்மேம்படுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும்திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09  கோடிமதிப்பீட்டில் சுற்றுலாத்தல  மேம்பாட்டு பணிகளும்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப்பகுதியை ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்டசுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், திருப்பூர்மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில்படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகளும்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலையில் ரூ.2.23 கோடிமதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும்  உள்பட தமிழ்நாடுமுழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில்நடைபெற்று வருகின்றன.

 சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகளை குறித்தகாலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் www.tamilnadutourism.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் யுனஸ்கோ நிறுவனத்தால்அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரியநினைவுச் சின்னங்கள், மலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், வனஉயிரிகள், அரண்மனைகள், நினைவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும்உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களின்மெய்நிகர் சுற்றுலாக்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் இணையதள முகவரியினை அனைத்துசுற்றுலா அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ளமக்களிடம் கொண்டு சேர்பதுடன், அவர்கள் மூலமாகவெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் கொண்டுசேர்த்து, உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கியசுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். 27.9.2024 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுலா தின விழாவில்வழங்கப்பட உள்ள சுற்றுலா விருதுகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து சுற்றுலா பங்குதாரர்களும் விண்ணப்பித்து பயன்பெறவேண்டும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், மாவட்டசுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர்அலுவலர்கள், மண்டல மேலாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.