கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைதனியாருடன் இணைந்து இன்று 15.08.2024 தொடங்கி18.08.2024 வரை நடைபெற உள்ள 3-வது தமிழ்நாடு சர்வதேசகாத்தாடி திருவிழாவை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்து பார்வையிட்டார்கள். பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது,

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டைமுதன்மை மாநிலாமாக உருவாக்கி வருகின்றார். குறிப்பாகசுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகஉருவாக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைசிறப்பாக நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தைஈர்த்ததன் காரணமாக உலகின் பல்வேறு துறைகளைசார்ந்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம்மேற்கொண்டு வருகின்றார்கள்.  தொடர்ந்து சுற்றுலாத்துறையின் மூலமாக வெளிநாட்டுமற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா,  மலைவாசஸ்தலங்களில் கோடைவிழாக்கள், பொள்ளாச்சியில்பலூன் திருவிழா, சென்னை தீவுத்திடலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள், கைத்தறியாளர்கள் பங்கேற்ற சென்னை விழா என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான தொடர்நடவடிக்கைகளால் கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில்57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம்ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்குதற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம்வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளார்கள். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும்,2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போதுதமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 15,49,10,708  உள்நாட்டு சுற்றுலா பயணிகள்வருகை தந்துள்ளார்கள்.

  தொடர்ந்து  மூன்றாம் ஆண்டாக தமிழ்நாடு சர்வதேசகாத்தாடி விழா இந்த ஆண்டு 2024 கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் இன்று தொடங்கி 4 நாட்கள்நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தியாஉள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச காத்தாடிஅணிகளைச் சேர்ந்த 40 பட்டம் விடும் வீரர்கள் கலந்துகொண்டு, டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம், தங்க மீன்கள், பாம்பு, கரடி, ஆக்டோபஸ், கொரில்லா உள்ளிட்ட வெவ்வேறு வகையான 250க்கும்மேற்பட்ட காத்தாடிகளை பொதுமக்களுக்கு காட்சி படுத்தஉள்ளனர். இந்த காத்தாடி திருவிழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்றஜல்லிக்கட்டு சிறப்பை விளக்கும் வகையில் சிறப்பு பட்டத்தைதமிழக குழுவினர் பறக்க விடுவார்கள். ‘உங்கள் வாழ்க்கையைவண்ணமாக்குங்கள்’ என்பதே இந்த ஆண்டு காத்தாடிதிருவிழாவின் மையபொருள் ஆகும்.

  “கடந்தாண்டு 150 காத்தாடிகள் பங்கேற்றன. இந்தாண்டுபட்டம் விடுவோர் கூடுதலாக பங்கேற்பதால் அவர்கள் பறக்கவிட உள்ள 250 காத்தாடிகளுக்கு அதிக இடம்தேவைப்படுவதால், கோவளத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப்பகுதியில் இந்த விழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றுகோப்ரா காத்தாடி ஆகும், மேலும் இந்த விழாவில் முதல்முறையாக மிகப்பெரிய ராட்சத வண்ணமயமான டெடி பியர்’ இடம்பெறப்போகிறது.  இந்த காத்தாடி திருவிழா சிறப்பாக உள்ளதைதெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்இன்று வருகை தந்துள்ளனர் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக பொதுமேலாளர் திருமதி. ச.கவிதா அவர்கள், திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் திரு.இதயவர்மன்அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்கள் ஆகியோர் உள்படசுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.