மார்ச் 31 முதல் வெளியாகிறது “ஜம்பு மஹரிஷி “ திரைப்படம்

டி.வி.எஸ்.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பாலாஜிபி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம்ஜம்பு மஹரிஷி’. இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காராபுகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள்மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலிபிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 31ல் திரைக்கு வருகிறது**********

பிரபல  இயக்குநரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சிவசங்கர் நடனபயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சி இயக்கத்தையும், ராஜ் கீர்த்தி படத் தொகுப்பையும், பி.புவனேஸ்வரன்,வசந்த சுபத்ரா வசனத்தையும் எழுதியுள்ளனர் . ‘தேனிசை தென்றல்தேவா இசையமைக்கபாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமான செலவில் உருவாக்கப்பட்ட ஜம்பு மஹரிஷி  திரைப்படம்  உண்மை தன்மையை அடிப்படையாகக் கொண்டது .அதர்மம் தோன்றும்போதெல்லாம் ஜம்பு மஹரிஷியால்தோற்றுவிக்கப்பட்ட ருத்ரவீரன்  தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவான் என்பதைமையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது .

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து பிதனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.திருச்சி அருகே திருவானைக்காவலில் ஜீவசமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு  இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் காசி ,ஊனமாஞ்சேரிதிருவண்ணாமலையகாண்டி ,அகோலம்ஆந்திரா கோல் கொண்டாபேலஸ்ஹைதராபாத் ஆகிய இடங்களில் 120 நாட்களில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது .மார்ச் 31 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.