துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட மெரினா கடற்கரையில்ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர், மெரினாநீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம்செலுத்துவதற்கான QR Code கட்டண சேவையைத் தொடங்கி வைத்து, நீச்சல்குளத்தினை சுற்றி பார்வையிட்டார். மெரினா நீச்சல் குளமானது, 1942ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைமாநகராட்சியிடம் இந்த நீச்சல் குளம் ஒப்படைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல்தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் தனியார் பராமரிப்பில் விடப்பட்ட இந்த நீச்சல் குளம் தற்போதுரூபாய் 1 கோடியே 37 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, பெருநகர சென்னைமாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் நடைபாதையை சீரமைத்து வர்ணம்பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்புப்பணிகள், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச்சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடை மாற்றும் அறைகளை பழுதுபார்த்து மேம்படுத்துதல், போதியமின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுபுதுப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த நீச்சல் குளம் 100 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.  குறைந்த அளவாக 3.5 அடியும், அதிக அளவாக 5 அடி உயரமும் உடையது. மேலும், இந்த நீச்சல் குளமானது காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும்.  காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும். இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும்கட்டணம் செலுத்துவதற்காக QR Code உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல்குளத்தில் 1 மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.50/- எனவும், இதனை ஆன்லைனில்பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ரூ.45/-ம், 12 வயது முதல் 14 வயதுவரையுள்ள சிறுவர்களுக்கு ரூ.30/- எனவும், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்குசிறப்புச் சலுகையாக ரூ.25/-எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல்குளமானது, பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை அன்று வார விடுமுறைவிடப்படுகிறது.  இந்த நீச்சல் குளம் நாளை (09.10.2024) முதல் பொதுமக்களின்பயன்பாட்டிற்கு செயல்படும். இந்த நீச்சல் குளத்தில் 10 உயிர் பாதுகாவலர்கள், 8 தூய்மைப் பணியாளர்கள், 10 சுத்தம் செய்யும் பணியாளர்கள், 2 கண்காணிப்பாளர்கள், 6 பாதுகாவலர்கள், 2 எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் என மொத்தம் 38 பணியாளர்கள் சுழற்சி முறையில்பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி. செழியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் ஆர். பிரியா, மயிலாப்பூர் சட்டமன்றஉறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு. மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர்ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் (பொ) திரு.கட்டா ரவிதேஜா, இ.ஆ.ப., மாமன்ற ஆளும்கட்சித் துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (எ) தனசேகரன், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.