கூத்துக் கலைஞர்களின் இன்னல்களை காட்டிய படம் “பபூன்”

கார்த்திகேயன் சந்தானத்தின் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் “பபூன்”.  தெருக்கூத்து கலைஞர்களின் இன்னல்களையும் சமுதாயத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை,  நகைச்சுவையுடன் தந்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். கூத்துக் கலைஞராகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் வைபவ். முத்தைய்யாவாக நடித்திருக்கும் கிராமிய பாடகரான அந்தகுடி இளையராஜாவின் பாடலும் அவரின் ஆடலும் ரசிக்கும்படி உள்ளது. பல படங்களில் நடித்த அனுபவம் போல் அவரின் முதல் படத்திலேயே காட்டியிருப்பது பாராட்டுதலுக்குரியது.