வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’

சமீபத்தில் வெளியானகொன்றால் பாவம்திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்நாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்குமாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்எனத் தலைப்பிட்டுள்ளனர்.****^****

இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறுகையில், “அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரதுஇருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பலசாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக்கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது“.

வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ்பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

  படத்தின் தொழில்நுட்பக் குழுகதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு: தயாள் பத்மநாபன்இசை, பின்னணி இசை: மணிகாந்த் கத்ரிஒளிப்பதிவு: சேகர் சந்திரா,  படத்தொகுப்பு: ப்ரீத்தி மோகன்தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிஎஸ் பாலச்சந்தர்,  ஆடை வடிவமைப்பு: மீரா சித்திரப்பாவைஸ்டண்ட் கோரியோகிராஃபி: சேத்தன் டி சோசா,  நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் வினோத் குமார்.