ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்  27.3.2022 ஞாயிற்றுகிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து முன்னாள் எம் எல் ஏ நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் துவக்கி வைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.